search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை அணை நீர்மட்டம்"

    • தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த 9ம் தேதி 71 அடி உயரம் கொண்ட அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 70 அடியில் நிலைநிறுத்தி வந்தனர். 10ம் தேதி மேலூர், கள்ளந்திரி மற்றும் 15ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி உள்பட அணையிலிருந்து 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. அணைக்கு 2001 கனஅடி நீர் வருகிறது. அணையி லிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 140 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • 71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகர குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் வைகை அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு நீர்பிடிப்பு பகுதி, மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து சீராக உயர்ந்தது.

    71 அடி உயரம் கொண்ட அணையில் இன்று காலை நிலவரப்படி 64.34 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 781 கனஅடிநீர் வருகிறது. 69 கனஅடிநீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    66 அடியை எட்டும் போது கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 68.50 அடியில் 2-ம் கட்டமும், 69 அடியாக உயர்ந்தபின்னர் 3-ம் மற்றும் இறுதி கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரியாக திறக்கப்படும்.

    மழை தொடரும் பட்சத்தில் வைகை அணை நீர்மட்டம் விரைவில் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகமாக விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 123.85 அடியாக உள்ளது. 593 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 700 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 52.10 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 73 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடி 1.8, கூடலூர் 2.4, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 2, போடி 0.4, வீரபாண்டி 1.4, சோத்துப்பாறை 1, பெரியகுளம் 2, வைகை அணை 3.6, வீரபாண்டி 3, ஆண்டிபட்டி 3 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
    • இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட அணையில் நீர்மட்டம் போதிய அளவு இல்லாததால் முதல் மற்றும் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மேற்குதொடர்ச்சி மலை, தேனி மாவட்டம், வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்றுகாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.35 அடியாக உள்ளது. 1366 கனஅடிநீர் வருகிறது. மதுைர மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 60 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் மும்முரமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து 754 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 123.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1322 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையி ன்நீர்மட்டம் 54.40 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. 126.28 அடிஉயரம் கொண்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் 125.39 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
    • 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. தென்மேற்கு பருவமழையின்போது போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் முதல்போக சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே விவசாயிகள் மழையை எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் மேற்குதொடர்ச்சி மலையில் பெய்த கூடுதல் மழையாலும், முல்லைபெரியாறு அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்படுவதாலும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் 71 அடிஉயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 49.57 அடியாக உள்ளது. அணைக்கு 915 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.80 அடியாக உள்ளது. 1665 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 1200 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.60 அடியாக உள்ளது. 11 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.20 அடியாக உள்ளது. வருகிற 3 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது. பெரியாறு 20.6, தேக்கடி 0.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக அறிவித்தாலும் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
    • இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள வைகை அணையின் மூலம் 5மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாராமாக உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. ஆனால் அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி மழை ஏமாற்றி வருகிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.47 அடியாக சரிந்துள்ளது. 239 கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.95 அடியாக உள்ளது. 416 கன அடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 77.40 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3கன அடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.6, தேக்கடி 2.2 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    • அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது.
    • மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.

    தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசரடி, வருசநாடு, வெள்ளிமலை, கண்டமனூர் பகுதியில் மழை இல்லாததால் மூலவைகையாறு வறண்டு காணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 47.63 அடியாக சரிந்துள்ளது. இதனால் முதல்போக சாகுபடி நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

    மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.50 அடியாக உள்ளது. 83 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.99 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பருவமழை கைகொடுத்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது.
    • ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பருவமழை கைகொடுத்ததால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து முழுகொள்ளளவை எட்டியது.

    அதனைதொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 62.80 அடியாக சரிந்துள்ளது. 628 கனஅடிநீர் வருகிறது. 2569 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 140.70 அடியாக உள்ளது. 123 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 50 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 125.40 அடியாக உள்ளது. 20 கனஅடிநீர் வருகிறது. 27 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது.
    • கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடி உயரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவிலேயே நீடித்து வந்தது.

    தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1819 கனஅடிநீர் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து 68.44 அடியாக உள்ளது. 705 கனஅடிநீர் வருகிறது.

    முல்ைலபெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 525 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 76 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடியாக உள்ளது. 42 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    • தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
    • இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ெதாடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் ெதாடர்ந்து 70 அடிக்கு மேல் நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. வரத்து 832 கனஅடி, திறப்பு 769 கனஅடி, இருப்பு 5829 மி.கனஅடி.

    தேனி மாவட்டத்தில் தொடர் மழை நீடிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் சில நாட்களுக்கு 70 அடியிலேயே நீடிக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் முல்லைபெரியாறு அணைக்கும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. வரத்து 1117 கனஅடி, திறப்பு 955 கனஅடி, இருப்பு 6194 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, வரத்து 10 கனஅடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 123.82 அடி, திறப்பு 3 கனஅடி.

    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது.
    • மேலும் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் மதுரை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் பருவமழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சீராக குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    மேலும் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 60.20 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1852 கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.90 அடியாக உள்ளது. 861 கன அடி நீர் வருகிற நிலையில் 2016 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.60 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 71.17 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 4, தேக்கடி 2, கூடலூர் 1.7, உத்தமபாைளயம் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
    • வைகை அணை நீர்மட்டமும் சீராக உயர்ந்து 54.99 அடியை எட்டியது.

    கூடலூர்:

    பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கேரளாவில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 128.20 அடியாக உள்ளது. அணைக்கு 1509 கனஅடிநீர் வருகிறது. 1633 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 53 அடிக்கும் கீழ் சென்றது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையாலும், பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும் அணைக்கு நீர்வரத்து 1612 கனஅடியாக உள்ளது.

    இதனால் நீர்மட்டமும் சீராக உயர்ந்து 54.99 அடியை எட்டியது. அணையில் இருந்து மதுரைமாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 969 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 76.91 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 17, தேக்கடி 15, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 0.8, வீரபாண்டி 8.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும், போதிய மழை இல்லாத காரணத்தாலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியுள்ளது.
    • 53 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டதால் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    கூடலூர்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியதும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் மழைப்பொழிவு தீவிரமடையும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. கடந்தஆண்டு இதேகால கட்டத்தில் தேனி மாவட்டத்தில் நல்ல மழை பெய்தது.

    தற்போது மழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும் அதற்கான அறிகுறி குறைவாகவே உள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் ஓரளவு மழை பெய்து வருகிறது.

    பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பாசனத்திற்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், போதிய மழை இல்லாத காரணத்தாலும் அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிய தொடங்கியுள்ளது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக உள்ளது. வரத்து 265கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 4288 மி.கனஅடி.

    வைகை அணை நீர்மட்டம் 52.98 அடி, வரத்து 447 கனஅடி, திறப்பு 869 கனஅடி, இருப்பு 2409 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடி, வரத்து 20 கனஅடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.46 அடி, திறப்பு 6 கனஅடி.

    ×